Followers

Saturday, September 21, 2019

Alex in wonderland


Music + comedy!

வாஆஆஆட்ட்??, ஹே! ச்சி! என்ன காம்போ இது??, பிரியாணிக்கு சாம்பார் ஊத்தி சாப்பிட்ற மாதிரி! நோ! நோ! வர்க் அவ்ட் ஆகாது! – என முகம் சுழிக்கும் தோழர்களே! தோழிகளே! பட்டெனப் பக்கத்தை க்ளோஸ் செய்வதை நிறுத்தி விட்டு, தொடர்ந்து கீழே படிக்கவும்!!

இசையையும்,ஹாஸ்யத்தையும் ஒன்றிணைத்துப் புதிதாய் ஒரு சுவை படைத்து தீராப் பசியோடு காத்திருக்கும் நம் செவிகள் பலவற்றிற்கு உணவாய்க் கொடுத்து நம்மை ஒரு அதிசய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார் திரு.அலெக்ஸாண்டர் பாபு.

என்னங்க... அதிசய உலகம்!?, Stand up comedy-ல இல்லாத வெரைட்டியா?, என் பக்கத்து வீட்டு மாமி கூட தான் அசத்தல் அம்புஜம்-ன்னு ஒரு youtube channel ஓபன் பண்ணி காமெடின்ற பேர்ல எல்லாரையும் காலி பண்ணிட்டு இருக்கு! இவர் என்ன புதுசா பண்ணிடப் போறார்!

நாம தான் சாஃப்ட்வேர் தலைமுறையைச் சேர்ந்தவங்களாச்சே! அதனால நம்ம பிரதான கேள்வியான what’s New in this?-ஐ கேட்டு வைப்போம்!

Alex is an energetic, young,handsome,talented..... Oh! Noooo! Wait!! Wait!


இப்படியெல்லாம் அவருக்கு நாம பில்ட்-அப் கொடுக்க முடியாது. ஏனென்றால்..

1.       அலெக்ஸ்க்கு வயசு 44. (Buahhhhh எனச் சிரிக்கும் இளசுகளே! பொறுங்கள்)
2.       இவரும் நம்மைப் போல ஒரு frustrated software engineer.
3.       எம்.எஸ்.வி, இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான் என 3 தலைமுறை இசையையும் முழுதாக ரசிக்கத் தெரிந்த மனிதர்.
4.       கொஞ்சம்ம்ம்ம்... இல்ல,இல்ல, நல்லாவே காமெடி பண்றார்!

சரி, பேசுனது போதும். ஷோ-க்குள்ள போகலாம்!

Note: இது ஒரு தங்லிஷ் ஷோ.

ராமநாதபுரத்துல பிறந்த அலெக்ஸாண்டர் பாபு சென்னை அண்ணா யுனிவர்சிட்டில engineering முடிச்சு software-ல வேலை செஞ்ச மனுஷன்! பார்த்திட்டிருந்த வேலையை அவர் வெறுக்காத நாளே இல்ல போல! கம்ப்யூட்டரோட கை,கால் கட்டப்பட்ட ஃபீல்! ஒரு கட்டத்துல அதாவது.. அவர் 40 வயசை எட்டினப்புறம் ‘உனக்கு வயசாய்டுச்சா டா மடையா’-ன்னு காலம் நடு மண்டைலயே நங்குன்னு கொட்டுனதுல மிரண்டு போய்.. இனியும் முடியாது! இப்போ கூட பிடிச்சதைப் பண்ணலேன்னா.. இனி எப்பவுமே பண்ண முடியாதுன்னு கம்ப்யூட்டர் கட்டைப் பிரிச்சு வெளியே வந்ததன் விளைவு.. இப்போ மைக்-ஐ பிடிச்சிக்கிட்டு நம்ம முன்னாடி ஸ்டேஜ்-ல நிற்கிறார்!


அவரோட இந்த 40-ஆண்டு கதைச் சுருக்கத்தை ஹிலாரியஸ்-ஆ காட்டுறாங்க எடுத்ததும்!

அதைத் தொடர்ந்து “welcome ladies and gentleman”- ன்னு சொன்னபடி ஹார்மோனியப் பெட்டியோட உள்ள வர்ற மனுஷன்.. ஒரு காலேஜ் பையன் தோற்றத்துல இருக்கிறார்! (மன்னிக்கவும்! ஒத்தையா ஒரு மனுஷன் மேடையேறி நிற்குறார்ன்னா.. தோற்றத்திலிருந்து,குரல் வரை அனைத்தையும் மதிப்பிடுகிற உரிமையை நாம் இயல்பிலேயே பெற்று விடுகிறோம்! தப்பில்லைன்னு நினைக்கிறேன்!)

எடுத்ததும் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து தொடங்குறார்! நல்லை,அல்லை பாடலை என்ன மாதிரி சொந்த வரிகளைப் போட்டு ப்ரேயர் சாங்-ஆ மாத்துறார் பாருங்க!

முன் வரிசைக்காரர்களிடம் உங்களுக்குப் பிடிச்ச கடவுள் யாருன்னு சொல்லுங்க, அவங்க பேரைப் போட்டு பாடுறேன்னு கேட்டுட்டு அவங்க இந்துக் கடவுள்களின் பெயரைச் சொல்லியதும், ஓகே! We will go with the minority gods of india !-ன்னு சொல்லிட்டு Jesus & allah-வை சேர்க்கிறார் பாட்டுல! இதுல ஜெயந்தி ஆண்ட்டி உங்களுக்கு ஓகே தான-ன்னு கேள்வி வேற!

நல்லை,அல்லை பாட்டை ஹல்லேலூயா,மாஷா அல்லா-ன்னு பாடிட்டு.. ஹரே ராமா, ஹரே கிருஷ்ணான்னு பாடினதும் மக்கள் கிட்ட  க்ளாப்ஸ் கிளம்புது!!


ஜோசஃப் இளங்கோ, ஜெயந்தி மேரின்னு ஆடியன்ஸ்க்கு பேர் வைக்கிறதெல்லாம் சிரிப்பு வெடி!


அடுத்ததாக மிருதங்கத்தைக் கையில் எடுத்து நலந்தானா பாட்டுக்கு தங்க்லிஷ்-ல லிரிக்ஸ்! எவ்ரிதிங்க் இஸ் ஃபைன்னு!! இடைல அவர் பேசுற எல்லாம் சிரிக்க வைக்குது!


Alice in wonderland-ல அந்தப் பொன்னு ராபிட் ஹோல்-க்குள்ள போய் தான் வண்டர்லேண்ட்-ஐப் பார்க்குறா! ஆனா.. நமக்கான.. கடவுள் கொடுத்த... வண்டர் லேண்ட்-ன்றது மியூசிக்! இசை! தமிழ் இசை!! இது தான் அவரோட thought!


-அவருக்கான இசை ஆர்வம் எங்கிருந்து வந்ததுன்றதை சொல்றவர்.. தான் கேட்டு வளர்ந்த ஆல் இண்டியா ரேடியோ,சிலோன் ரோடியோல தமிழ் திரை இசையைப் பற்றிச் சொல்றார்.


முதல்ல அவர் தொடங்குறது.. தி ஒன் அண்ட் ஒன்லி!! இசைஞானி இளையராஜாவைப் பற்றி!! இளையராஜா-ன்னு பின்புறம் ஒளி எழுந்ததும்.. கைத் தட்டுறதை நம்மால கட்டுப்படுத்த முடியுறதில்ல!! 


நான் தேடும் செவ்வந்திப் பூவிது...


இளையராஜா தானே இசையமைத்துப் பாடின இந்தப் பாட்டுல தொடக்கத்தில் வர்ற ஆலாபனையை பாடுவார்! Divine-ன்னு பல சமயம் நான் உணர்ந்த ஆலாபனை இது! காதுக்குள்ள புகுந்து... மனசைத் தடவிக் கொடுக்குற மாதிரி.. அந்தக் குரல் டக்குன்னு ஒரு அமைதியை உடம்பு முழுக்க உணர வைச்சிடும்!!

அதையே அலெக்ஸ்-ம் சொல்வார்! இசையும்,இளையராஜாவும் நம் உள்ளங்களை ஒன்றிணைக்கும் பாலம் தான் போல! 


மௌனமான நேரம்.....


இந்த 2 பாட்டுலயுமே ஆலாபனையை அடிச்சுக்கவே முடியாது! அந்தப் பாட்டு அமைதியை கொடுக்குதுன்னா.... இந்தப் பாட்டு.. மயக்கத்தைக் கொடுக்கும்! ஆல் பிகாஸ் ஆஃப் எஸ்.ஜானகி!


இளையராஜா மியூசிக்ல வர்ற pause & silence பத்திப் பேசி.. இவர் இந்தப் பாட்டைக் கலாய்க்கிறதெல்லாம் ஆடியன்ஸை சிரிக்க வைக்குது!


அடுத்ததா பேக் க்ரவ்ண்ட்ல மலேசியா வாசுதேவன்-ன்னு பேர் வந்ததும்! மக்கள் பொங்குறாங்க! நானும் தான்! மலேசியா வாசுதேவன் குரலை பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா?


மலேசியா வாசுதேவனுக்கு அலெக்ஸ் கொடுக்கிற இன்ட்ரோ செம! நல்லா சிரிக்க வைப்பார்!!


பூவே... இளைய பூவே.. வரம் தரும் வசந்தமே....

வாவ்வ்வ்! வாவ்வ்வ்வ்-ன்னு!! வீட்ல எல்லாரும் கைத் தட்ட ஆரம்பிச்சுட்டோம்! வாசுதேவன் வாய்ஸை வாயைப் பொளந்து தான் கேப்போம் ஒவ்வொரு தடவையும்! அலெக்ஸ் அவரைப் பத்தி பேசுனதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு!


இளையராஜாவுடனான நம் ரசனையென்பது பல சமயங்களில் எஸ்.பி.பி, யேசுதாஸைக் கேட்பதிலேயே நின்று போய் விடுகிறது! ஆனா.. மலேசியா வாசுதேவன்,ஜெயச்சந்திரன் போன்றவர்கள் பாடிய பாடல்களெல்லாம்.. மிச்சருக்குள்ள கிடக்குற முந்திரி மாதிரி! Tasteful! தன்னாலேயே அவங்க பக்கம் நம்மை ஈர்த்துடும்!!


அவர் பேசிட்டிருக்கும் போதே நம்ம மூளை ‘இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது, வா வா வசந்தமே, ஆகாய கங்கை,கோடை கால காற்றே,ஆசை நூறு வகை, கூடையில கருவாடு’-ன்னு எல்லாப் பாட்டையும் வரிசைப் படுத்த ஆரம்பிச்சிடுது!


முதல் மரியாதைல 5 பாட்டையும் பாட அவருக்கு எப்படி சான்ஸ் கிடைச்சதுன்னு சொல்ற அலெக்ஸ், But he is un appreciated, unsung hero-ன்னு ஆரம்பிச்சு அப்படியே உலகநாயகன் பக்கம் திரும்புறார்!


Ofcourse! நினைவோ ஒரு பறவை – அவரோட ஃபர்ஸ்ட் சாய்ஸ்...


எல்லாருக்கும் கமலஹாசன் பாடின பாட்டுன்னா .. முதல்ல ஞாபகம் வர்றது இது தான்! அலெக்ஸ்க்கும் அப்படித் தான் போல! அப்டியே உலகநாயகனைக் கலாய்க்கவும் செய்றார்!!


இஞ்சி இடுப்பழகி....


கமலஹாசன் குரல்ல ஒரு அழுத்தம் இருக்கும்! உச்சரிக்குற வார்த்தை ஒவ்வொன்னுக்கும் அவர் கொடுக்கிற ப்ரெஷர்.. தொண்டைல இருந்து பம்ப் ஆகி.. நாக்கைத் தொட்டு.. வாய் வழியா வெளியே ஜம்ப் அடிக்குறதை.. கேட்குற  நம்மால ஃபீல் பண்ண முடியும்! அதனால தான் ‘என் உதிரத்தின் விதை! என் உயிர் உதிர்த்த சதை!வேறொருவனின் பகவன் எனப் பொறுத்திடுவேனா?’-ன்னு  (from uthama villan) சொல்லும் போது... அடி முதல் நுனி வரை அத்தனை உறுப்பும் ஆட்டம் கண்டுடுது நமக்குள்ள!


நான் மேல சொன்ன இந்த எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிற மாதிரி அலெக்ஸ் தேர்ந்தெடுத்த அடுத்த பாட்டு..


ரகுபதி ராகவ.. ராஜா ராம்!! – ஃப்ரம் ஹே ராம்!!


நான் எமோஷனல்-ஆ வரிசைப்படுத்துறேன்! ஆனா.. ஷோ-ல கமலஹாசனை constipation,complication-ன்னு கலாய்ச்சு அலெக்ஸ் நம்மள வேறப் பக்கம் இழுத்துட்டுப் போயிட்டிருப்பார்! Constipation issue இருந்தா.. இதைப் பாடுங்கன்னு.. மனுஷன் தேர்ந்தெடுத்த அடுத்த பாட்டை பாருங்க!


போட்டு வைத்தக் காதல் திட்டம் ஓகே கண்மணி...


எத்தனை வருஷம் ஆனாலும் சரி! லவ் சக்ஸஸ் ஆனதும்.. தமிழ்நாட்டு இளைஞர்கள் பாடுற,பாடப் போற ஒரே பாட்டு இதுவாகத் தானிருக்கும்! அதனால, அலெக்ஸ்..   காவேரி அல்ல, அணை போட்டுக் கொள்ள-ன்னு ஸ்டார்ட் பண்ணதும், செம்ம சௌண்ட் ஆடியன்ஸ் சைட்!!!


அடுத்து.. ஐம்பதாண்டு காலம் தமிழ் திரை இசையை ஆண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான் அலெக்ஸோட சாய்ஸ்!!


பாங்கோ-ன்ற இன்ஸ்ட்ரூமெண்டை வைச்சு.. என்னம்மா மியூசிக் போட்டாருன்னு அலெக்ஸ் சொல்லும் போது, ஆமால்லன்னு நம்மையும் ஆச்சரியப் பட வைக்குறார் எம்.எஸ்.வி!

அடுத்து அலெக்ஸ் பாடுற ஒரு சின்ன மெட்லிக்கு.. தலை ஆட்டி, கைத் தட்டி நாம ரசிக்கலேன்னா.. உயிரோட இருக்கிறதுல அர்த்தமே இல்ல! 


காற்று வாங்கப் போனேன்.. நான் கவிதை வாங்கி வந்தேன்..

ஆஹா.. மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்....

அவளுக்கென்ன அழகிய முகம்....

பாலும்,பழமும் கைகளில் ஏந்தி..

அவள் பறந்து போனாலே.... (trust me, he was able to bring out the softness which we can only feel from PBS)

போனால் போகட்டும் போடா...

பார்த்த ஞாபகம் இல்லையோ...


வாவ்! வாவ்! வாவ்!! பெருசா தொழில்நுட்ப வளர்ச்சி எதுவும் இல்லாத காலகட்டத்துலயே இவ்ளோ அழகான மெலடிஸ்-ஐ மெல்லிசை மன்னர் இயக்கி இருக்கார்ன்னா.. அவரோட இசையறிவு,ஆர்வம் எப்பேர்ப்பட்டதா இருந்திருக்கும்! 50 வருஷமெல்லாம் கம்மி!! 500 வருஷம் தமிழ் சினிமாவுல இருந்திருக்கனும் அவர்!!


மாப்பிள்ளை டோய்,மன்னாரு டோய்! நாங்கெல்லாம் டேய்,டோய்க் குடும்பம்ன்னு எம்.எஸ்.வியையும் அலெக்ஸ் விட்டு வைக்கல! நன்னாஆஆ.. கலாய்ச்சுட்டார்!


தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..


டோய்,டோய்ன்னு இந்தப் பாட்டு உருவான விதத்தை வர்ணிக்கிற விதம்.. ஹாஹாஹா தான்!


அடுத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பத்தி பேசுவார்!! Ultimate part of the show!


டி.எம்.எஸ்,பிபிஎஸ்,சுசீலாவைப் பற்றியெல்லாம் போதுமான அளவுக்கு எத்தனையோ பேர் பேசிட்டாங்க! இனியும் பேசிட்டு தான் இருக்கப் போறோம்! ஆனா.. சீர்காழி மாதிரியான ஆட்களெல்லாம் அப்பப்போ மட்டுமே பூக்குற குறிஞ்சிப் பூ மாதிரி! அலெக்ஸ் மட்டுமில்ல.. இன்னும்,இன்னும் நிறைய பேர் இவரைப் பத்திப் பேசனும்! எல்லாருக்கும் தெரியனும்.. இது போன்ற ஆட்கள் இசையை எப்படியெல்லாம் தன் போக்கிற்கு ஆட வைத்து.. ஆண்டார்கள் என்பதை!


பிரம்ம முகூர்த்தத்தின் போது.. Seerkazhi will come online-ன்னு சொல்றதெல்லாம் செம சிரிப்பு! அவரோட ஹை பிட்ச் ஹார்மோனியப் பெட்டியைத் தாண்டி பிய்த்துக் கொண்டுப் பறப்பதைப் பற்றியெல்லாம் ஜாலியா சொல்லியிருப்பார்!

பக்திப் பாடல்களைப் பத்தி ஒருபக்கம் பேசினாலும்.. அவர் பாடின மற்றப் பாடல்களையும் மறக்காம mention பண்ணியிருக்கார்! எனக்கு அதுல ரொம்ப சந்தோஷம்.. 


காட்டு மல்லிப் பூத்திருக்க.. காவல் காரன் காத்திருக்க..

காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யாருமில்லை (எனக்கு சீர்காழின்னதும் முதல்ல ஞாபகம் வர்றது இது தான்!)


அடுத்ததாக... எப்பேர்ப்பட்ட திட மனதுக்காரர்களையும்.. கண்ணீர் விடச் செய்து விடும் ஒரே பாடல்!


உள்ளத்தில் நல்ல உள்ளம்.. உறங்காதென்பது..


பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய குரல் சீர்காழியோடதுன்னு அலெக்ஸ் சொல்றது.. 100% உண்மை!! அந்தப் பாடலைப் பற்றிய அத்தனை அம்சங்களையும் அழகா விவரிச்சிருப்பார்! போர்க்களம்,என்.டி.ராமா ராவ்! எல்லாத்தையும் கவர் பண்ணிட்டு.. கடைசியா சிவாஜி கணேசனைப் பத்தி சொல்லுவார்! வாவ்வ்வ்வ்!!

வெறும் மூச்சை மட்டும் விட்டு.. நடிகர் திலகம் என்ன மாதிரித் திரையை ஆள்கிறார் என்பதை அவர் சொல்லும் போது.. புல்லரிச்சுப் போகுது நமக்கு!

If you can breath, you can do it!!-ன்னு ஒரே மெசேஜ்-ம் சொல்றார்!

அடுத்து வர்றார் நம்ம ஏரியா பக்கம்! எஸ்.பி.பி, யேசுதாஸ்!!

பாட்டு-ன்றதை வெறும் இசையும்,வார்த்தைகளும் கலந்த ஒரு மூட்டையாகப் பார்க்குற நமக்கு, அந்த வார்த்தைகளுக்குள்ள என்ன மாதிரியான பாவத்தை வெளிப்படுத்த முடியும்ன்றதைக் காட்டுன ஒரே ஆளு எஸ்.பி.பி மட்டும் தான்! ஒரு சின்ன சிரிப்பு (சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது),செல்லச் சிணுங்கல்(விழியிலே மணி விழியிலே), அழுகை(மணியோசை கேட்டு எழுந்து) , ஆரவாரம் (என்னோடு பாட்டு பாடுங்கள்) இன்னும் என்னென்ன உணர்ச்சிகளை.. பாட்டுல பாவங்களாக வெளிக் கொணர முடியுமோ.. அத்தனை மேஜிக்கையும் ஒரு தொகுப்புக்குள்ள கொண்டு வர்ற வித்தை தெரிந்த ஒரே மனிதர்! இனியொரு எஸ்.பி.பி கிடைக்க எத்தனை,எத்தனை ஜென்மங்கள் நாமக் காத்திருக்க வேண்டுமோ தெரியல! அந்த வகைல நாம ரொம்ப ரொம்ப லக்கி!

மன்றம் வந்தத் தென்றலுக்கு...


இந்தப் பாட்டோட தொடங்கி எஸ்.பி.பி-ரஜினிகாந்த் காம்போ-க்கு போறார்! அடுத்து எல்லாம் ஹிலாரியஸ்-ஆ இருக்கு!

டான்ஸ் பண்ணலாம்,ஆனா மூவ்மெண்ட் வேண்டாம்! அதாவது அரசியல்-ல இருக்கோம்,ஆனா எலெக்ஷன் வேண்டாம்ன்னு சொல்றோம்ல அந்த மாதிரின்னு தலைவரையும் விட்டு வைக்கல அலெக்ஸ்!

அதுக்கப்புறம்.. பாடலுக்கிடையில் எஸ்.பி.பி சிரிக்கிற மாதிரி வர்ற பாட்டுக்களை சொல்லுவார்! 


மொட்டுக்கள் மெல்ல.. திறக்கும் போது.. முத்து,முத்து என்கிறது..-ன்னு எஸ்.பி.பி சிணுங்கியபடி பாடினதை சொல்லிக் காட்டுவார்.

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் – பாட்டுல வர்ற விரக்தியான சிரிப்பு!

திருந்தாம போச்சே ஊருசனம் தான்! போற்றி பாடடி பொன்னே!

விழியிலே மணி விழியிலே – பாட்டுல மொத்தமாவே சிரிச்சிட்டே தான் பாடியிருப்பார் எஸ்.பி.பி! அதை அலெக்ஸ் பாடுற விதம் ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்குது!

Whenever SPB sings, thats what always happens
There’s someone out there,tickling him somewhere – ன்னு அதே ட்யூன்ல பாடி முடிப்பார்!


அடுத்ததா.. யேசுதாஸ்!!!!


ஒன் வெரைட்டி ஃபார் எவ்ரிதிங்ன்னு மரண கலாய் அவரை!


அம்மாவை அழைக்காத உயிர் இல்லையே..

கண்ணே கலைமானே..

என் இனிய பொன் நிலாவே..

ஏதோ நினைவுகள்.. கனவுகள்..

ராஜ ராஜ சோழன் நான்!! – ஆடியன்ஸை கண்ட்ரோல் பண்ணவே முடியல! சௌண்ட் அவ்ளோ வந்தது இந்தப் பாட்டுக்கு!

அப்படியே இறங்கி.. ஐயப்பா! ஸ்வாமி ஐயப்பா! –ன்னு பாடி.. அடுத்து..

மாசி மாசம் ஆளான பொன்னு-ன்னு நாட்டி-ஆ இறங்கிடுவார்.


‘தும்ச்சு,தும்ச்சாக்-கெல்லாம் நாம ‘கட்டிப்புடிடா’ சாங்-க்கு அப்புறம் தான் பாடினோம்! பட், ராஜா சார்! அப்பவே இந்த சாங்-ல போட்டுட்டார்!.


ஐயப்பா சாங்-அ பாடுற மாதிரி இந்த கில்மா பாட்டைப் பாடியிருப்பார்ன்னு அலெக்ஸ் கலாய்ச்சது அல்மோஸ்ட் உண்மை தான்! ஆனா.. ஸ்வர்ணலதா வாய்ஸ்.. மயங்கிக் கிறங்க வைச்சு.. பாட்டோட ஃப்ளோல நம்மை இழுத்துட்டுப் போயிடும்!

இந்த ட்யூனை ஐயப்பா சாங் – ஓட மேட்ச் பண்ணி ஓம்,ஓம்,ஓம் போட்றதெல்லாம் செம்ம!!

He is god’s own singer from god’s own country-ன்னு யேசுதாஸைப் பாராட்டி ஃபுல் ஸ்டாப் வைக்குறார்.


அடுத்ததாக.. நம்ம தலைமுறை இசையமைப்பாளர்! தி ஒன் ஒன்லி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!


முதன்முதல்ல ரோஜா வந்ததைப் பற்றி.. கேசட்ல கோரஸ் பாடகர்கள் பெயரைக் கூட மென்ஷன் பண்ணியிருக்கிறதை சொல்லியிருப்பார்!

அரபிக் கடலோரம் பாட்டை அவர் பாடினதை சொல்லும் போது, ரஹ்மான் வாய்ஸை டெண்டுல்கரோட கம்பேர் பண்ணி.. கலாய்ச்சுத் தள்ளிட்டார்!

ஊர்வசி,ஊர்வசி, முக்காலா,முக்காபுலா ஃப்ரம் காதலன் எல்லாம்.. நம்ம ஜெனரேஷன் சாங்-ன்னு I was so excited!!

அடுத்து ஜோதா அக்பர் க்வாஜாஜி சாங் பாடி... ஷோ முடிச்சு வைக்கிறார் அலெக்ஸ்!!

மறுபடி ஹலேலூலா,மாஷா அல்லா,ஹரே ராமா,ஹரே கிருஷ்ணான்னு நல்லை,அல்லை ட்யூன்ல பாடினார்!


Indeed it was a wonderland for all the music lovers!


பெரும்பாலான மக்கள் Stressful ஆன வாழ்க்கை வாழ்ற இந்தக் கால கட்டத்துல, தினம் காலைல நமக்குப் பிடிச்ச பாட்டு கேட்குறதும், பிடிச்ச காமெடி சீன் பார்க்குறதும் நல்ல மைண்ட் ரிலேக்ஸேஷனைக் கொடுக்கும்!

நிஜமா.. ஒரு பாட்டும்,ஒரு சிரிப்பும்.. நம்ம மனநிலையை மொத்தமா புரட்டிப் போடுற வல்லமை கொண்டது! ஏன்னா.. பாட்டைக் கேட்குறது காது மட்டுமில்ல! மூளை,மனசு எல்லாமும் தான்!

ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாடி ஒரு அனுபவம்,ஒரு நினைவு இருக்கும்! அதுக்குள்ள தொலைஞ்சு போய்.. அந்தக் காலகட்டத்தை திரும்பிப் பார்க்க வைச்சு.. மறந்து போன விசயங்கள் பலவற்றை ஞாபகப்படுத்த வைக்குது! நல்லதோ.. கெட்டதோ! நினைவுகள் எல்லாமே ப்ரஷியஸ் தான்! தங்கப் பெட்டிக்குள்ள சேமிச்சு வைக்க வேண்டிய விஷயம் தான்!

உள்ளக் கிடங்குல கேட்பாரில்லாம கிடக்குற நினைவுகளை.. ஏதோ ஒரு இசை.. தூசி தட்டி எடுத்து பார்க்க வைக்குதுன்னா.. அது ரொம்பப் பெரிய விஷயம் தானே?, சில சமயம் இல்ல.. பல சமயம்.. அந்த நினைவுகளும்,ஞாபகங்களும்.. அடுத்த நாள் நாம வாழப் போற வாழ்க்கைக்கு உந்து சக்தியா கூட அமையலாம்! Who knows!

இப்படியிருக்கிற பட்சத்துல, மியூசிக்கை மையமா வைச்சு நடக்குற ஒரு காமெடி ஷோ! நமக்கு டபுள் ட்ரீட் தானே? ஜாக்பாட் அடிச்சுட்டார் அலெக்ஸ்ன்னு தான் சொல்லுவேன் நான்!!


மக்களே!!

உலகம் வேகமா இயங்குது! எதுக்குமே எனக்கு நேரமில்ல! அப்படி,இப்படின்னு ‘சிவனே’-ன்னு (ஓகே! ஜீஸஸே!, அல்லாவே) சுத்திட்டிருக்கிற உலகத்து மேல பழியைப் போடாதீங்க! ஒரு நாளைக்கு 24 மணி நேரம்ன்றதும், ஒரு மணி நேரத்துக்கு 60 நிமிஷம்ன்றதும், ஒரு நிமிஷத்துக்குள்ள 60 வினாடிகள்ன்றதும் எப்பவும் மாறுனதில்ல! இனியும் மாறப் போறதில்ல! உலகம் ஒரே மாதிரி தான் இருக்கு! நம்ம மனசு தான்.. அவசரம்,அவசரம்ன்னு எதையோ நோக்கி விடாம ஓடின மயமா இருக்கு! நமக்கு யாரும் ஸ்டாப் பட்டன் போட மாட்டாங்க! நாமளே நம்மள ஸ்டாப் பண்ணிக்கிட்டாத் தான் உண்டு!

Alex was lucky enough! Profession-ஐ விட்டுட்டு passion-ஐ நோக்கி அவரால move ஆக முடிஞ்சது! அது எல்லாருக்கும் சாத்தியமான்னு தெரியல!
நமக்கு ஸ்டாப் பட்டனை ப்ரஸ் பண்ண பயம் இருக்கலாம்! But we can always pause!

கழுத்தை நெரிக்குற அளவுக்கு ஆஃபிஸ்ல வேலை மலை போல குவிஞ்சு கிடந்தாலும் பரவாயில்லன்னு! எதையும் யோசிக்காம.. லீவ் போட்டு வீட்ல இழுத்துப் போர்த்தித் தூங்கலாம்! என்னைக்காவது ஒரு நாள் நைட் 3 மணி வரை முழிச்சிருந்து நமக்குப் பிடிச்சப் புத்தகத்தை படிக்கலாம், நெட்ல சர்ஃப் பண்ணலாம்! படத்துக்குப் போகலாம், பாட்டு கேட்கலாம், ஐஸ்க்ரீம் சாப்பிடலாம், பீச்ல விளையாடலாம்!

என்ன இல்லை இங்க நாம ரசிச்சு வாழ! சின்ன சின்ன விசயங்களை ரசிக்கத் தொடங்கினா.. வாழ்க்கை அழகாகும்! சந்தோஷம்,நிம்மதியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! வாழ்ற வாழ்க்கை திருப்தியா இருக்கனும்!

Thanks for the wonderful show Alex!! ஒரு complete relaxation-ஆ இருந்தது!! மக்களே! நீங்களும் கண்டிப்பா பாருங்க!!


-நிவேதா.

8 comments:

  1. ஒரு நிமிடம் நான் அப்படியே shock ஆகிட்டேன் .....😋...வேறு ஓருவருடைய blog கு வந்துட்டான்னா என்று 🙈.... I have never heard about this show .... will definitely watch the show now..... thanks dear ... keep writing ..

    ReplyDelete
  2. Like his shows, Amazon primers irukunu sonanga...really missed it but this glimpse speaks a lot...thanks

    ReplyDelete
  3. அருமையாக காமெடி நிகழ்ச்சி பற்றிசாென்னிர்கள் சுப்பர்

    ReplyDelete
  4. Rompa rompa arumaiya sollirkkinga nivi ma,ovvoru padalgalum ovvoru vitham aanalum anaithum nammai mayanga vaikkkum paralegal.������

    ReplyDelete
  5. Ellathayum epdi nivi alaga solrenga thanks...

    ReplyDelete